வவுனியா பிரதேச செயலகம் நடாத்தும் கலைத்துளி நிகழ்வுகள்!!

297

v

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பிலும் வழிப்படுத்தலிலும் வவுனியா பிரதேச செயலகத்தினால் நடைபெறவுள்ள கலைத்துளி நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 07.07.2015 பிற்பகல் 3.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில் பறக்கத்துடிக்கும் பட்டாம்பூச்சிகள் தொலைக்காட்சி நாடகம், ஓவியக்கண்காட்சி, வாழ்க்கை ஒரு பொய் வேசம் பாடல் காட்சிப்படுத்தல் மூன்று நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி செ.வனஜா, சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி தமிழ்மணி அகளங்கன்( உப தலைவர் கலாச்சார பேரவை), சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் அருணா செல்லத்துரை, வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலய அதிபர் திரு.சி.வரதராஜா ஆகியோர் கலந்து நிகழ்வுகளை நடாத்தவுள்ளதாக வவுனியா பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-