வவுனியா புதிய மத்திய பஸ் நிலையத்தை திறந்து வைக்குமாறு பயணிகள் கோரிக்கை!!

301

Bus

வவுனியாவில் புதிதாக கட்டப்பட்டு இன்னமும் திறக்கப்படாத நிலையில் உள்ள மத்திய பஸ் நிலையத்தை திறந்து வைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வவுனியாவில் முதலாம் குறுக்குத்தெரு இரண்டாம் குறுக்குத்தெரு ஆகியவீதிகளில் தனியார் பஸ்கள் தரித்துநிற்பதனால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் வீதிவிபத்துக்கள் ஏற்பட்டு வருவதை தவிர்க்கும்பொருட்டு அரசினால் யாழ்வீதியில் மத்தியபஸ்நிலையத்தை கட்டும் பணி கடந்த ஆண்டு ஆரம்பிக்பட்டு நடப்பு ஆண்டின் முற்பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டு 6 மாதம் கடந்த நிலையிலும் இன்னமும் திறக்கப்படாதுள்ளமை பயணிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் இவ் பஸ் நிலையத்தை திறந்து வைக்கவேண்டும் என்ற கோரிக்கை பயணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது .