நீர் நிறைந்த வாளிக்குள் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

307

water

திருகோணமலை, உவர்மலைப் பகுதியில் இரண்டரை வயதுக்குழந்தை நீர் நிறைந்த வாளிக்குள் விழுந்து பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 3.30 அளவில் உவர்மலையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டரை வயதான மயூரன் யோகீஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

குளியலறைக்குள் குளிப்பதற்காக வாளியில் நீர் நிரப்பப்பட்டு குளித்துக் கொண்டிருந்த வேளையில் தாயார் சமயலறைக்குள் சென்றுள்ளார்.

அச்சமயம் குளியலறையில் பிள்ளையின் கையிலிருந்த சவர்க்காரம் வாளிக்குள் விழுந்துள்ளது. இதனை எடுக்க முற்பட்ட வேளையில் குழந்தை வாளிக்குள் விழுந்துள்ளது.

அவ்விடத்துக்கு வந்த தாய் பிள்ளை வாளிக்கு தலை கீழாய் கிடப்பதைக் கண்டு தூக்கி எடுத்து அயலவர்களின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மகனைக் கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமைக் காரியாலய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது திருகோணமலையில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.