பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அண்ணணும், தங்கையும் காதல் திருமணம் புரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஜெபமாலை மேரி (24) என்ற பெண், தனியார் மருத்துவமனை ஒன்றில், செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவரும் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் முறை உறவினரான ஜேசுதாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் முறை தவறிய காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அவர்கள் தங்களின் காதலை கைவிடவில்லை.
கடந்த மாதம் 13ம் திகதி, மருத்துவமனைக்கு சென்ற ஜெபமாலை மேரி, மாலை வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள், மருத்துவமனை மற்றும் அக்கம்பக்கத்து பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
ஜேசுதாசும் காணாமல் போயிருந்ததால், இதுகுறித்து ஜெபமாலை மேரியின் உறவினர்கள் கொள்ளேகால் புறநகர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவர்கள் 2 பேரின் கைத்தொலைபேசி ‘ஐ.எம்.ஐ.இ.‘ எண்களை ஆய்வு செய்து பெங்களூரு அத்திபெலே பகுதியில் அவர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பெங்களூரு அத்திபெலேவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஜெபமாலை மேரியையும், ஜேசுதாசையும் விசாரித்த போது, இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் 2 பேரையும் மீட்டு, ஜெபமாலை மேரி, ஜேசுதாஸ் ஆகியோரின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஜெபமாலை மேரியின் பெற்றோர், அவரை தங்களுடன் வந்துவிடும்படியும், அண்ணனை திருமணம் செய்வது தவறு என்றும் கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளனர்.
ஆனால் ஜெபமாலை மேரி, தனது காதல் கணவருடன் செல்வதாக உறுதியாக கூறிவிட்டதால், பொலிசார், ஜெபமாலை மேரியை ஜேசுதாசுடன் அனுப்பி வைத்துள்ளனர்.