குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்தும் மிருகங்கள் : நெஞ்சை உலுக்கும் காணொளி!!

320

Capture

பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கூட்டாக சேர்ந்து மது ஊற்றி தருவதும், அது என்னவென்று அறியாமல் குடிக்கும் குழந்தையின் செயல் சமூக வலைதளமான வட்ஸ்–அப்பில் பரவி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வட்ஸ்–அப்பில் வெளியான வீடியோவில், 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மது போத்தல்களுடன் ஒரு இடத்தில் சுற்றி அமர்ந்துள்ளார். அவர்களுக்கு நடுவில் அந்த குழந்தை அமர்ந்துள்ளது. மதுவை ஒரு டம்ளரில் ஊற்றி குழந்தைக்கு கொடுத்துள்ளனர். மது என்று அறியாமல் குழந்தை குடிக்கிறது.

இதனை வாலிபர் கும்பல் ரசித்து பார்க்கின்றனர். அவர்களுக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்ட பதிவெண் கொண்ட பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனை யாரோ கைப்பேசியில் வீடியோ எடுத்து வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர். வாலிபர்களின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மோட்டார் சைக்கிள் பதிவெண் மூலம் விசாரணை நடத்தினர்.

கலசப்பாக்கம் மேல்சோழாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் குழந்தையின் தாய்மாமனை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் மீதமுள்ள 6 பேரை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.