பக்திப் படத்தின் படப்பிடிப்பில் கோழிக்கறி கேட்டு தகராறு செய்த ரம்யாகிருஷ்ணன், கஸ்தூரி!!

238

Ramya

பக்தி படத்தின் படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணனும் கஸ்தூரியும் அசைவ உணவு கேட்டு படக்குழுவினருடன் தகராறு செய்ததாக தெலுங்கு இணையத்தளங்களில் செய்தி பரவி உள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு தெலுங்கில் அன்னமாயா என்ற பக்தி படம் வெளியாகி பரபரப்பாக ஓடியது. 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்து துறவியை பற்றி இப்படத்தை எடுத்து இருந்தனர். துறவி கரக்டரில் நாகார்ஜுனா நடித்து இருந்தார். கோவில் அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பு நடந்தது.

பக்தி படம் என்பதால் படம் முடியும் வரை யாரும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. காய்கறி, சாம்பார் என சைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டன. இதில் ரம்யாகிருஷ்ணன், கஸ்தூரி இருவரும் பக்தை வேடத்தில் நடித்தனர்.

இருநாட்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி படமானது. அதில் நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்குக்கு இருவரும் வந்து இருந்தனர். தங்கள் காட்சிகளில் நடிக்கவும் செய்தார்கள்.

மதிய உணவுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. ரம்யா கிருஷ்ணனும், கஸ்தூரியும் அசைவ உணவு கேட்டார்களாம். அவை கொடுக்கப்படவில்லை. மறுநாள் படப்பிடிப்பிலும் கோழிக்கறி கேட்டு தகராறு செய்தார்களாம்.

பக்தி படம் என்பதால் படக்குழுவினர் யாரும் அசைவம் சாப்பிடவில்லை என்று எடுத்துச் சொல்லியும் சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் அவர்களுக்கு மட்டும் கோழிக்கறியுடன் அசைவ உணவு பரிமாற படத்தின் இயக்குனர் ராகவேந்திரராவ் ஏற்பாடு செய்தாராம்.

இந்த தகவலை படக்குழுவினர் இப்போது வெளியிட்டு அச்செய்தி தெலுங்கு பட உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.