வவுனியா செட்டிகுளம் நித்திய நகரில் நள்ளிரவிவில் புகுந்த காட்டு யானையால் பயன்தரு பயிர்கள் நாசம் !

406

காட்டு-யானை

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள நித்திய நகர் பகுதிக்குள் நேற்று  முன்தினம் (05.07.2015) நள்ளிரவில் புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள் பயன்தரு பயிர்களை நாசமாக்கி சென்றது .

மேற்படி பிரதேசத்தில் காணப்பட்ட  வீடொன்றிலிருந்த 15 க்கு மேற்பட்ட தென்னை மரங்களை பந்தாடி சென்ற காட்டு யானையால் அப்பிரதேச  மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில்  உள்ளனர் .