வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள நித்திய நகர் பகுதிக்குள் நேற்று முன்தினம் (05.07.2015) நள்ளிரவில் புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள் பயன்தரு பயிர்களை நாசமாக்கி சென்றது .
மேற்படி பிரதேசத்தில் காணப்பட்ட வீடொன்றிலிருந்த 15 க்கு மேற்பட்ட தென்னை மரங்களை பந்தாடி சென்ற காட்டு யானையால் அப்பிரதேச மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் உள்ளனர் .