வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் தமிழ்த்தின விழா வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா தலைமையில் நேற்று (30.07.2015) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை அவர்கள் கலந்துகொண்டார்.
குழு இசையினை வவுனியா இறம்பைக்குள மகளிர் கல்லூரி மாணவர்களும், பேச்சினை செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களும், தனி நடனத்தினை நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களும் தனியிசையை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களும்,
இசையிற் கதையை அறபா வித்தியாலய மாணவர்களும் நாட்டார் இசையிசையினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவர்களும் விசிறி நடனத்தினை இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்களும் வழங்கினர்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் தினப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-