குழந்தையை கொன்று கைப்பையில் வைத்து ஷொப்பிங் சென்ற பெண்!!(வீடியோ)

304

Lady

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் பெற்ற குழந்தையை கொன்று அதனை கைப்பையில் வைத்து ஷொப்பிங் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்த டியோனா ரோட்ரிகஸ்(18) என்பவர், தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் 14 வயதில் கருவுற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி, தனது தோழியின் வீட்டிற்கு சென்ற இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள கழிவறையில் வைத்து 3.6 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்த இவர், அக்குழந்தையை கொலை செய்து தனது கைப்பையில் வைத்து அங்குள்ள விக்டோரியா மாலுக்கு ஷொப்பிங் சென்றுள்ளார்.

ஷொப்பிங் செய்யும்போது கடையில் திருடியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இவரது கைப்பயை சோதனை செய்ததில், உள்ளே இருந்த குழந்தையை பார்த்த கடை உரிமையாளர் டியோனாவை பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் டியோனா ஆஜரானார்.

டியோனா சார்பாக வாதாடிய வழக்கறிஞர், டியோனா குழந்தையை கொலை செய்யவில்லை என்றும் குழந்தை இறந்தே பிறந்தது என கூறியுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டியோனாவை பிணையில் வெளியே விடக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். டியோனாவோ தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.