தோல்விக்கு நானே காரணம் : மலிங்க புலம்பல்!!

317

Malinga

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள், டெஸ்ட் தொடர்களை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 2 டி20 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. இதிலும் இலங்கை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதில் அணித்தலைவர் மலிங்க ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தார். அவர் 4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் எடுத்த நிலையில் 46 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

இது பற்றி மலிங்கா கூறுகையில், நான் சிறப்பாக பந்து வீசவில்லை. நான் அனுபவ வீரராக இருந்திருந்தால், அதற்கு ஏற்றதை அணிக்கு செய்திருக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்யவில்லை.

அதே சமயம் மற்ற வீரர்களையும் குறைகூற முடியாது. அவர்கள் இளம் வீரர்கள். தற்போது தான் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

கப்புகெதர மற்றும் புதுமுக வீரர் சிறிவர்த்தன ஆகியோர்களின் அதிரடி ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. இதில் சிறிவர்த்தன போட்டியின் முடிவை தனி ஆளாக மாற்றக் கூடியவர்.

மேலும், அடுத்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.