வன்னி மாவட்டத்திற்கான தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இன்று (01.08.2015) வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் வன்னி மாவட்ட அமைப்பாளராக சிவநாதன் கிஷோர் நியமிக்கப்பட்டார்.
இன் நிகழ்வில் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர், வன்னி மாவட்ட வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்த கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-