வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் கவிஜீ வினோவின் “என் காதல் முழுவதும் உன் இதயத்திற்கே” கவிதைத் தொகுப்பு இன்று (01.08.2015) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
முதற் பிரதியினை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் சந்திரகுமார் (கண்ணன்) பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை கவிஞர்கள் பெற்றுக்கொண்டனர்.
இன் நிகழ்வில் கவிஞர் செந்தூரன், கவிஞர் புரட்சி, கவிஞர் மாணிக்கம் ஜெகன் மற்றும் கலை இலக்கிய நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-