வவுனியா நெற் அனுசரணையுடன் ஓமந்தை அரசகுடியிருப்பு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய பொங்கல் வைபவ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று (31.07.2015) ஆலயத்தில் நடைபெற்றது.
கனவில் உருவெடுத்து ஆடும் நாயகியே என்றபாடல் பாடலாசிரியர் சுப்பிரமணியம் வரதகுமாரின் வரிகளிலும் யோசேப் மனோகரனின் குரலிலும், இராயப்பு ஜெயரூபனின் இசையிலும், பாஸ்கரன் கதீசனின் ஒளிப்பதிவிலும் வெளியிடப்பட்டது.
இசை இறுவட்டு வெளியீட்டைத் தொடர்ந்து தமிழ் அருவி த.சிவகுமாரனின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.
-பிராந்திய செய்தியாளர்-