இது சும்மா டிரெய்லர்தான்…வெறுப்பேற்றும் கொடூர வேட்டைக்காரி!!

449

2B07143800000578-3182671-Quarry_Sabrina_Corgatelli_a_keen_huntress_from_Boise_Idaho_uploa-a-5_1438485747855

சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிக வெறுப்பாளர்களை சம்பாதித்தவர் என்ற பெருமை அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தைச் சேர்ந்த கொடூர வேட்டைக்காரி சப்ரினாவையே சேரும். எத்தனையோ பேர் தன்னை வெறித்தனமாக வெறுத்தாலும், அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் ‘இது வெறும் டிரெய்லர்தான்… இன்னும் நிறைய இருக்கு…’ என்று திமிருடன் கூறியுள்ளார் சப்ரினா.

ஜிம்பாப்வே நாட்டின் புகழ்பெற்ற ‘சிசில் த லயன்’ என்ற சிங்கம் கொல்லப்பட்டதால், உலகிலுள்ள பல விலங்குகள் நல ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவிற்கு வேட்டையாடச் சென்ற சப்ரினா, அங்குள்ள ஊழியர்களுக்கு 10 ஆயிரம் டொலரிற்கும் மேலாக (சுமார் 12 லட்ச ரூபாய்) பணம் கொடுத்து ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை, ராட்சத மான் என்று பல அரிய காட்டு விலங்குகளை தன் வில்லைக் கொண்டு, வேட்டையாடிக் குவித்துள்ளார்.

இறந்த விலங்குகளுடன் கம்பீரமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அண்மையில் அவர் பேஸ்புக்கில் பதிவேற்ற, அதுவரை அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட, அவர் மீது வெருப்பைக் கக்கும் எதிரிகளாக மாறினர். பலர் எதிர்மறையான கருத்துக்களால் சப்ரினாவை திட்டித் தீர்த்தனர்.

இப்படி தன்னை திட்டுபவர்களுக்கென்றே, தனியாக ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ள சப்ரினா, அதில், “என்னை வெறுப்பவர்களே, காத்திருங்கள்.. இன்னும் நிறைய (புகைப்படங்கள்) இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

குற்றத்தையும் செய்துவிட்டு, குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் சப்ரினா நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.