அஜித், விஜய், சூர்யாவுக்கு வைரமுத்து பகிரங்க வேண்டுகோள்!!

561

vairamuthu-

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், காஜல் அகர்வால், வைரமுத்து, டி.இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில், டி.இமான் பேசும்போது, ‘பாயும் புலி’ படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும். வைரமுத்து அழகான வரிகளை கொடுத்துள்ளார். புலியாக இருந்தாலும் பாயும் புலியாக இருந்தாலும் அந்த காட்டுக்கு வைரமுத்துதான் ராஜா என்று பேசினார்.

பின்னர் பேசிய கவிஞர் வைரமுத்து, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் எனக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார். அதனால், இப்படத்தை பற்றி பேச எனக்கு நிறைய விஷயங்கள் உள்ளது.

விஷால் இப்போதே மிகவும் உயரம். இந்த படம் வெளிவந்த பிறகு அவர் மேலும் உயரத்துக்கு சென்றுவிடுவார். சுசீந்திரன் இதுவரைக்கும் வெற்றிப் படங்களைத்தான் கொடுத்துள்ளார். அவருடைய படங்களுக்கு மினிமம் கியாரண்டி கொடுக்கலாம். சுசீந்திரன் மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர். அவரை அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதை அவர்களுக்கு நான் பகிரங்கமான வேண்டுகோளாக விடுக்கிறேன் என்று பேசினார்.