ஜேர்மனியில் பிரதமர் பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் 4–வது முறையாக போட்டியிடுகிறார்.ஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மெர்கெல் பதவி வகித்து வருகிறார். கடந்த 2005–ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருக்கிறார்.இந்த நிலையில் வருகிற 2017–ம் ஆண்டில் ஜேர்மனியில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் பிரதமர் பதவிக்கு மெர்கெல் 4–வது தடவையாக மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இவர் தனது கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். அதற்கான தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்குகிறார். இத்தகவலை ஏஞ்சலா மெர்கெலின் செகரட்டரி ஜெனரல் பீட்டர் தவுபர் தெரிவித்துள்ளார்.ஜேர்மனியில் பிரதமர் பதவி வகிக்க கட்டுப்பாடுகள் இல்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் போட்டியிடலாம். மெர்கெலுக்கு முன்னதாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்மட் சோகி பிரதமராக பதவி வகித்தார்.