மதுகம – அகலவத்தை பிரதேசத்தில் இரு இளம் யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை தமது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் 23 வயதான இரட்டைச் சகோதரிகள் எனவும் தெரியவந்துள்ளது. சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.இதேவேளை கச்சகல்லாறு ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று சிலருடன் நீராடச் சென்ற வேளையே இவர் இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
வெலிமட பகுதியைச் சேர்ந்த 27 வயதான இவரை, பிரதேச மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் பலியாகியுள்ளார்.