வவுனியாவில் வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்!!(படங்கள்)

301

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (02.08.2015) காலை கபே அமைப்பு ஏற்பாடு செய்த வாக்காளர்ளை அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்காளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது சட்டங்களை மதிப்பவர், இலஞ்ச ஊழல்களில் ஈடுபடாதவர், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடாதவர், குற்றவாளி அல்லாதவர், தேர்தல் சட்டங்களை மதிக்கும் ஒருவரையே வாக்காளர்கள் தெரிவு செய்யவேண்டும் என்று விழிப்புணர்வுக் கையெழுத்து நடவடிக்கையினை கபே அமைப்புடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இன் நிகழ்வில் சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான இந்நிகழ்ச்சித்திட்டம் இன்று வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் உடாக கொழும்பை நோக்கி செல்லவுள்ளதாக கபே அமைப்பின் வவுனியா மாவட்ட ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA