மலசலகூடத்தில் தலை அடிபட விழுந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!!

260

Baby

சீனாவின் பீஜிங் நக­ரி­லுள்ள மல­ச­ல­கூ­ட­மொன்­றி­லி­ருந்து புதி­தாகப் பிறந்த பெண் குழந்தையொன்று அதி­ச­யிக்கத்தக்க வகையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி குழந்­தையின் தாய் அந்தக் குழந்­தையை மல­ச­ல­கூ­டத்தில் பிர­ச­வித்த பின் அதனைக் கைவிட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் மல­ச­ல­கூடக் குழாயில் தலை அடி­பட விழுந்­தி­ருந்த குழந்­தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட பொது­மக்கள் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து, அந்தக் குழந்தை மீட்கப்பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அந்தப் பச்­சிளம் குழந்­தையின் தாயையும் தந்தையையும் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.