சீனாவின் பீஜிங் நகரிலுள்ள மலசலகூடமொன்றிலிருந்து புதிதாகப் பிறந்த பெண் குழந்தையொன்று அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி குழந்தையின் தாய் அந்தக் குழந்தையை மலசலகூடத்தில் பிரசவித்த பின் அதனைக் கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் மலசலகூடக் குழாயில் தலை அடிபட விழுந்திருந்த குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அந்தக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பச்சிளம் குழந்தையின் தாயையும் தந்தையையும் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.