லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று காலை (09.08.2015)ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
நேற்றைய தேர்த்திருவிழாவின் போது பிரித்தானியாவின் பலபாகங்களிலும் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் . மேலும் பக்த அடியார்கள் காவடிகள் பாற்குடம் மற்றும் கற்பூர சட்டி ஏந்தியும் அங்கபிரதட்சணம் செய்தும் அடியடித்தும் தங்கள் வேண்டுதல்களை மேற்கொண்டிருந்தனர் .