புகழ் பெற்ற தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் இன்று(01.09.2015) செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும் மலர் செலுத்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன் நிகழ்வில் கலை இலக்கிய நண்பர்கள்வட்டத் தலைவர் தமிழ்மணி அகளங்கன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் கண்ணன், வவுனியா நகரசபை செயலாளர் க.சத்தியசீலன், முன்னாள் நகரசபை உப தலைவர் சந்திரகுலசிங்கம் (மோகன்), கவிஞர் மாணிக்கம் ஜெகன், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் வேட்பாளர் ரோய் ஜெயக்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து மலர்மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தனிநாயகம் அடிகளாரின் நினைவுச் செற்பொழிவும் தமிழ்மணி அகளங்கன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-