வவுனியா நகரசபையினரால் அவர்களின் எல்லைக்குட்பட்ட ஹெறவப்பொத்தான வீதி மற்றும் தர்மலிங்கம் வீதியின் இரு புறமும் உள்ள வியாபார நிலையங்களில் அத்துமீறி பிடிக்கப்பட்டிருந்த இடங்களை இன்று காலை 11.00 மணி தொடக்கம் அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் செயற்பாட்டின் நோக்கமானது வவுனியா நகர்ப் பகுதியின் போக்குவரத்து நெரிசலினை குறைப்பதற்கும் மக்களின் நடைபாதைகளை விஸ்தரிப்பதற்கும் ஆகும் என நகரசபையினர் தெரிவித்தனர்.
இன் நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்களும், நகரசபை சிற்றூழியர்களும் ஈடுபட்டதுடன் வவுனியா பொலிசார் இச் செயற்பாட்டிற்கு பாதுகாப்பு வழங்கினார்கள்.
-பிராந்திய செய்தியாளர்-