சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!!

306

Arr

திருகோணமலை மகாதிவுள்வெள பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக மொறவெள பொலிஸார் தெரிவித்தனர்.

மகாதிவுள்வெள பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் சிறுமியை அழைத்து சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை திருகோணமலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய ஒருவரை பாலையூற்றுப் பகுதியில் பொலிஸார் கைது செய்ததுடன், சந்தேக நபரிடமிருந்து 1050 மில்லிகிராம் ஹெரோயின் பக்கட்களையும் கைப்பற்றியதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.