வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர்களுக்கான வரவேற்பும் மதிப்பளிப்பும் நேற்று (02.09.2015) மாலை 3 மணியளவில் வவுனியா வைரவப்புளியங்குளம் முத்தையாமண்டபத்தில் வன்னிகுரோஸ் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, எம்.பி.நடராஜ், கவிஞர் மாணிக்கம் ஜெகன், சமயத்தலைவர்கள் மன்னார், முல்லைத்தீவு வவுனியா ஆகிய பிரதேசங்களிலிருந்து பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
பொது மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்திப் பேசியதுடன், வடமாகாணசபை உறுப்பினர்களும் பொது மக்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த பொது மக்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன் தமக்கு நாடாளுமன்றில் ஒதுக்கப்படும் நிதிகளை வன்னி மாவட்ட அபிவிருத்திக்குச் செலவிடவுள்ளதாகவும், கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டு குறைகளை பார்வையிட்டு பொதுமக்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.