ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மூவின மதங்களின் சமய அனுஷ்டானங்களும் இடம் பெறவுள்ளன.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு ஆசிவேண்டி பொலன்னறுவையில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பழுகஸ்கமனவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஆராதனையும் மன்னம்பிட்டியவிலுள்ள இந்து கோவிலில் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றன.
கதுருவெல ஜூம்மா பள்ளிவாசளிலும் பிராத்தனை நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு இன்றைய தினமும் காலை முதல் முவீன மதஸ்தானங்களிலும் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1951 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 03 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் யாகோட பிரதேசத்தில் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிதுவத்தை பெற்றதோடு இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.