வவுனியாவில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!!(படங்கள்)

279

உள்ளக விசாரணை தேவையில்லை சர்வதேச விசாரணையே தேவை என வலியுறுத்தி பத்துலட்சம் மக்களிடம் கையெழுத்து வேட்டை நேற்று மாலை 3 மணியளவில் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் உள்ள முத்தையா மண்டபத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்கி ஆனந்தன், வைத்திய கலாநிதி சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சிக்குப் புறம்பாக இடம்பெற்ற இந்நிகழ்வினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான இந்திரராஜா, எம்.பி.நடராஜா ஆகியோரால் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் கையெழுத்திட்டனர். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன் கருத்துத் தெரிவிக்கையில் எமக்கு சர்வதேச விசாரணையே தேவை என ஜக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்கும் நோக்குடன் இப் பத்துலட்சம் கையெழுத்து வேட்டையினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA