பிறந்து ஏழு நாட்களான ஆண் சிசு ஒன்று இறந்த நிலையில் இன்று வவுனியா பொது வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பெரியகுளம் பகுதியியைச் சேர்ந்த தம்பதினருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை கிடைத்துள்ளது. பிறந்து ஏழு நாட்களான நிலையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் பால் கொடுக்கும் போது புரையேறியுள்ளதால் இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிசுவின் உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணையினை வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பிராந்திய செய்தியாளர்-