இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலைகளைக் கண்டித்தும் மரண தண்டனையான தூக்குத்தண்டனையை நிறைவேற்றக் கோரியும் நேற்றுக் காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்திடும் போராட்டம் இடம்பெற்றது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்துப் போராட்டத்தில் பெருமளவானவர்கள் கையெழுத்திட்டனர்.