வவுனியாவில் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!!

305

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா செதெவ்மியின் படுகொலையைக் கண்டித்து நாளை (30.09.2015) வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப் போராட்டம் நடைபெறவுள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இவ் ஆர்ப்பாட்டம் நாளை காலை 9.30 மணியளவில் வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெறவுள்ளது.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன மத பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர்கள், முற்போக்கு சக்திகள், அனைவரையும் பங்குகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

unnamed