நாட்டில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபடுவோர்களுக்கு தண்டனையை விரிவுபடுத்தக் கோரியும் இன்று(30.09) காலை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்ககு முன்பாக மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
இப் பேரணியில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் பொது அமைப்புகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் தெரிவித்திருந்தனர்.
இப் பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வைத்தியர் சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நட்ராஜ் மற்றும் வெகுஜன அமைப்புக்கள், சர்வமத அமைப்புக்கள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் தொழிற்சங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.