வவுனியா வெளிக்குளம் க.உ.வித்தியாலயத்தில் இன்று (01.10.2015) நடைபெற்ற சிறுவர்தின நிகழ்வில் காலை ஆராதனையின்போது மாணவர்களுக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டு அதிபர், ஆசிரியர்களால் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து காலை 10.30 மணியளவில் அதிபர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் சிறுவர்தின சிறப்புரைகள், மாணவர்களுக்கான கணித வினாடி வினா போட்டி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் நீர் நிரப்புதல் போட்டி மற்றும் கிளித்தட்டுப் போட்டி, ஓவியம் வரைதல் போட்டிகள் இடம் பெற்று அதிபர் பிரதம விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுக்கான சிற்றுண்டிகள், தேநீர் என்பன வழங்கி மகிழ்வித்து நிகழ்வு நிறைவுபெற்றது.