யால சரணாயலயத்திற்கு வேட்டைக்கு சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு!!

738

gun-firingயால வனவிவிங்குகள் சரணாலயத்திற்கு வேட்டைக்கு வந்த குழுவினருக்கும் வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகளுக்கும் இடையில் இட்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேட்டைக்கு வந்த குழுவில் இருந்த உருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை வேட்டைக்கு சென்றுள்ள மூவரடங்கிய இந்தக் குழுவினரால் மிருகம் ஒன்று வேட்டையாடப்பட்டிருந்ததால் அவர்களை கைது செய்ய அதிகாரிகள் சென்ற வேளை துப்பிக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் வேட்டைக்கு வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த சடலம் கதிர்காமம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.