அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து ரக்பி லீக் விளையாட்டின் மாபெரும் இறுதிச் சுற்றுப் போட்டிக்கான அனுமதிச் சீட்டுகளுடன் தனது கணவரை வழங்குவதாக அறிவித்து மனைவியொருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மக்கார்தி என்ற மேற்படி பெண் வாலாற்று முக்கியத்துவம் மிக்க விளையாட்டு போட்டியை கண்டுகளிப்பதற்கான இரு அனுமதிச்சீட்டுகளை பெரும் போராட்டத்தின் மத்தியில் பெற்றிருந்தார்.
அந்த அனுமதிச்சீட்டுகளை தனது கணவருக்குப் பிறந்தநாள் பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவதற்காக அவர் அதிகாலை 2.00 மணி வரை விழித்திருந்து அவற்றை கணவரிடம் காண்பித்துள்ளார்.
ஆனால் அவரது கணவரோ அது தொடர்பில் பாராட்டு எதனையும் தெரிவிக்காததால் சினமடைந்த டெபி, அந்த அனுமதிச் சீட்டுகளை இணையத்தளத்தில் விற்பனைக்கு விட்டு அந்தச் சீட்டுகளை வாங்கும் விளையாட்டு இரசிகருக்கு .அவர் விரும்பும் பட்சத்தில் தனது கணவரை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
“ நான் எதிர்பார்த்த பிரதிபலிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை. அதனால் நான் அவற்றை (அனுமதிச்சீட்டுகளை) மிகவும் மகத்துவமான ஒருவருக்கு விற்க விரும்புகிறேன். இரு அனுமதிச்சீட்டுகள் மட்டுமே உள்ளன” என இணையத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த அந்தப் பெண், தனது கணவரை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.