தனியார் தொலைக்காட்சி மீது நடிகை புகார்!!

284

laxmi-ramakrishnanதனியார் தொலைக்காட்சி ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் 25 வயதில் 8 முறை கருக்கலைப்பு செய்ததாக சொன்னார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டேன். அந்த வார்த்தை நான் நடத்திய நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டது. நான் 3 படங்களை இயக்கி இருக்கிறேன். 45 படங்களில் நடித்துள்ளேன்.

ஒரு தனியார் தொலைக்காட்சி என்னை கிண்டல் பண்ணும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வெளியிட்டது. தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை வெளியிட இருக்கிறது. என்னை இழிவுபடுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். அவர் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.