வவுனியாவில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடன் கைது செய்யப்படுவார்கள் : பொலிசார் எச்சரிக்கை!!

659

வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று (02.10-2015) சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டம் பிதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்குகெட்டி கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட வைரவப்புளியங்குளம், மற்றும் குருமன்காடு போன்ற பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாலை 5.00 மணியளவில் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர் என தெரிவித்த வவுனியா உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்குகெட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் உடன் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொது மக்கள் 024-2222226, 024-2222223, 024-2222224, 024-2222222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு பொலிசாருக்கு முறைப்பாட்டை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டார்.

vavuniya vavuniya2 vavuniya3