யுவதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி குறித்து தகவல்கள் வெளியாகின!!

376

Atta

யுவதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் சமூக இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளி குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியும், இளைஞனும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க மாதுவ ஆற்றிற்கு அருகில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி கல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், கடந்த வருடம் கட்டுநாயக்க பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தபோது அந்த பகுதியில் தங்கியிருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இந்த காலப்பகுதியில் தனது தங்குமிடத்திற்கு அருகில் வசித்த இளைஞன் ஒருவருடன் யுவதி காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் பிறந்ததின உபசாரத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் திருமணம் புரிவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையொன்று அவசியமில்லை என இருவரும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.