தனியார் துறை ஊழியர்களது சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்க வேண்டுமென வேலை கொள்வோரை கட்டாயப்படுத்தும் சட்ட மூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர்பாடல் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாவால் அதிகரிக்கும் படி ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இந்த ஆலோசனைக்கு சட்ட அதிகாரம் இல்லாதபடியால் வேலை கொள்வோர் பலர் சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை.
இதையடுத்து 2,500 ரூபா சம்பள அதிகரிப்பை கட்டாயப்படுத்தி சட்ட மூலமொன்றை கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.