திருமதி மைதிலி தயாபரன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
திரு.செல்வராஜா பிரபாகரன்( பிரதம மின் பொறியியலாளர்- இ.மி.சபை) தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக கு.சிதம்பரநாதன்(பீடாதிபதி-கல்வியல் கல்லூரி வவுனியா),
கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.உதயகுமார், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் உட்பட பெருந்திரளான பிரதேச முக்கியஸ்தர்களும் கலை ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.