வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலத்தில் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தால் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (05.10.2015) நடைபெற்றது.
இந் நிகழ்வில் 16.10.2015 இல் ஓய்வு பெற இருக்கும் பொறியியலாளர் திரு.மு.சிவகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு அவரை பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.