வவுனியாவில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா!!

345

வவுனியா கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழாவில் நேற்று (06.10.2015) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த கௌரவ மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்கள் ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தைப் பேணி பணியாற்ற வேண்டுமெனவும் நாட்டிற்கும், வீட்டிற்கும் உகந்த நற்பிரசைகளை உருவாக்கும் பெரும் பணியை ஆசிரியர்கள் ஆற்ற வேண்டுமெனவும் அது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரியப் பெருந்தகைகைள் மாணவர்களால் மாலை அணிவித்தும் கௌரவ மாகாண சபை உறுப்பினர், அதிபர் ஆகியோரினால் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம், வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாக்களிலும் கலந்து கொண்டு ஆசிரியர்களிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

SAM_0034 SAM_0042 SAM_0050 SAM_0051 SAM_0060 SAM_0061 SAM_0071 SAM_0076 SAM_0079 SAM_0087 SAM_0088 SAM_0090 SAM_0091 SAM_0095