25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்!!

559

download

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைதிபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை வெளியான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி அமைதிபுரம் தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் கிருஜன் 152 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்.

துணுக்காய் வலயத்தின் எல்லைக் கிராமமான அமைதிபுரம் தமிழ் வித்தியாலயம் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பாடசாலை.

கூலித்தொழிலை அடிப்படையாக கொண்ட ஓர் வறிய குடும்பத்தில் பிறந்து, 25 வருடங்களின் பின் குறித்த மாணவன் சித்தியடைந்தமை சாதனையே என பாடசாலை சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

download