விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற மாணவி ஹரிணி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
வெற்றி குறித்து மாணவி தெரிவிக்கையில்,
நான் மாவட்டத்தில் முதல் நிலை வரவேண்டும் என்ற எண்ணத்துடன் கடுமையாக படித்திருந்தேன். அதற்கு எனது அம்மா, அப்பா, அதிபர், ஆசிரியர்கள் நல்ல பக்கபலமாக இருந்தார்கள்.
பெறுபேறு வந்தவுடன் எனது கனவு நனவாகுமா என்ற எதிர்பார்ப்புடனும் ஒரு வகை பயத்துடனும் பெறுபேற்றைப் பார்த்தேன்.
நான் முதல் நிலை பெற்றிருந்தது தெரியவந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன சொல்வதென்றே புரியல.
நான் எதிர்காலத்தில் ஒரு விரிவுரையாளராக வரவேண்டும் இதுவே எனது இலக்கு என்கிறார் அம் மாணவி.