நைஜீரியாவின் டமதுறு நகரில் புதன்கிழமை இடம்பெற்ற 3 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.குடியிருப்புப் பகுதியொன்றிலிருந்த சிறிய உணவுக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதேசமயம், புலானி குடியிருப்புத் தொகுதியில் இடம்பெற்ற மூன்றாவது தற் கொலைக் குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.