நைஜீரியாவில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்!!

562

triple-suicide-attacks-hit-northeastern-nigeriaநைஜீ­ரி­யாவின் டம­துறு நகரில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற 3 தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 14 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.குடி­யி­ருப்புப் பகு­தி­யொன்­றி­லி­ருந்த சிறிய உணவுக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்­பெற்ற முத­லா­வது தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இரண்­டா­வது தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு அருகில் இடம்­பெற்­றுள்­ளது. இந்தத் தாக்­கு­தலில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.அதே­ச­மயம், புலானி குடி­யி­ருப்புத் தொகு­தியில் இடம்­பெற்ற மூன்றாவது தற் கொலைக் குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.