ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு நேற்று புதன்கிழமை (07.10.2015) முதற்கட்டமாக வவுனியாவில் ஆரம்பமாகி முதல் நாள் அமர்வு இனிதே நிறைவுபெற்றது.
அந்த வகையில் நேற்றையதினம் வவுனியா மாவட்டத்தில் 06 நிலையங்களில் 21 பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாட கருத்தரங்கு நடைபெற்றது.