வவுனியா ஏ9 வீதி, சாந்தசோலை சந்தியில் சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்டோவை எதிரே வந்த பேருந்து மோதியதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா, சாந்தசோலை, ஏ9 வீதியில் சாரதி பயிற்சியில் ஆட்டோ ஒன்று ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வவுனியாவில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பேருந்து அருகில் இருந்த தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்துள்ளது.
இதன்போது, பின்னால் வேகமாக சுற்றுலா பயணிகளுடன் வந்த பேருரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மஞ்சள் கடவையில் பயணித்த சாரதி பயிற்சி ஆட்டோவை மோதித் தள்ளியது.
இச் சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.