பங்களாதேஷின் டாக்காவில் அமைந்துள்ள பங்காபந்து விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனக் கிண்ண தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி களின் கடைசி நாளான நேற்று இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.
குழு ஏயில் பங்களாதேஷ், உஸ்பெகிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்திருந்த இலங்கை நேற்றைய போட்டியில் பூட்டானை 2–0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டது.
இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் விளையாடிய இலங்கை அணி சார்பாக போட்டியின் 13 ஆவது நிமிடத்திலும் 85 ஆவது
நிமிடத்திலும் மொஹமட்அவாம் அக்ரம் இரண்டு கோல்களைப் போட்டார். பங்களாதேஷுடனான ஆரம்பப் போட்டியில் 2 – 0 என தோல்வி அடைந்த இலங்கை, பலம்வாய்ந்த உஸ்பெகிஸ்தானிடம் 3 – 0என தோல்வி அடைந்திருந்தது.