19 வயதிற்குட்பட்ட ஆசிய  காலந்தாட்ட தகுதிகாண் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!!

244

news_image_1_பங்­க­ளா­தேஷின் டாக்­காவில் அமைந்­துள்ள பங்­கா­பந்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வந்த 19 வயதுக்­குட்­பட்ட ஆசிய கால்­பந்தாட்ட கூட்­டு­சம்­மே­ளனக் கிண்ண தகு­திகாண் கால்­பந்­தாட்டப் போட்­டி­ களின் கடைசி நாளான நேற்று இலங்­கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்­தது.

குழு ஏயில் பங்­க­ளாதேஷ், உஸ்­பெ­கிஸ்தான் அணி­க­ளிடம் தோல்வி அடைந்­தி­ருந்த இலங்கை நேற்­றைய போட்­டியில் பூட்­டானை 2–0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டது.

இந்தப் போட்­டியில் மிகுந்த நம்­பிக்­கை­யு­டனும் விடா­மு­யற்­சி­யு­டனும் விளையா­டிய இலங்கை அணி சார்­பாக போட்­டியின் 13 ஆவது நிமி­டத்­திலும் 85 ஆவது
நிமி­டத்­திலும் மொஹமட்அவாம் அக்ரம் இரண்டு கோல்­களைப் போட்டார். பங்­க­ளா­தே­ஷு­ட­னான ஆரம்பப் போட்­டியில் 2 – 0 என தோல்வி அடைந்த இலங்கை, பலம்வாய்ந்த உஸ்பெகிஸ்தானிடம் 3 – 0என தோல்வி அடைந்திருந்தது.