முரளிக் கிண்ணம் 2015 கிரிக் கெட் சுற்றுப் போட்டி நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.நேற்று காலை ஆரம்பமான இந்தத் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில் நடைபெறுகின்ற இப்போட்டியில் 24 அணிகள் பங்குபற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளிக் கிண்ணம் கிரிக்கெட்டின் பெண்களுக்கான போட்டி நடைபெற்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் போது கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு நற்குணம் முன்னேற்ற அமைப்பினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை
மாணவர்களிடம் சங்கக்கார கையளித்தார்.