முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி!!

528

1235179853Spots

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நரம்பு பிரச்சனை காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நரம்பில் இரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நவ்ஜோத் சிங் சித்துவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பலோ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டவுன் ஆனால் அவுட் இல்லை! ஆண்டவன் அருளால் வாழ்க்கையை அச்சுறுத்தும் நோயில் இருந்து மீண்டு வருகிறேன். வாழ்க்கை மிகவும் நாசுக்கானது, அதை பிரார்த்தனை கொண்டு கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.