பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்த பிரளயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் முகமாக ஜெனிவாவிற்கு அருகில் கடலுக்கு கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரளயப் பரிசோதனை உபகரணத்தில் இதுவரை உருவாகியவற்றிலேயே மிகவும் சிறிய திரவத் துளிகள் உருவாகியுள்ளன.
ஈய அணுக்களுடன் புரோத்தன்களை மோதவிட்ட போது இந்தப் பெறுபேறு கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்போது சூரியனின் உள்ளடக்கத்தை விடவும் 250,000 மடங்குகள் அதிக சூடான வெப்பம் தோன்றியுள்ளது.
இத்தகைய அதி உயர் வெப்பநிலை யில் எந்தவொரு திரவமும் உடனடியாக ஆவியாகவே வாய்ப்புள்ள நிலையில், எவ்வாறு மிகவும் சிறிய இந்த திரவத் துளி உருவானது என்பது தம்மை ஆச்சரியமடைய வைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த திரவத் துளிகள் ஐதரசன் அணுவை விடவும் 100,000 க்கும் அதிகமான மடங்கு சிறியதாகும்.இந்தத் துளிகள் வாயு நிலையை விட வும் தெளிவான திரவ நிலையில் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிரளயம் தோன்றியதையடுத்து எவ் வாறு பிரபஞ்சம் காணப்பட்டது என்பது தொடர்பான கருதுகோளை உருவாக்கு வதற்கு இந்தப் பரிசோதனை துணை புரியும் என விஞ்ஞானிகள் நம்புகின்ற னர்.