12 வயது சிறுவனை தவறுதலாக சுட்டுக்கொன்ற 11 வயது சிறுவன்!!

469

gun-firing

11 வயது சிறுவன் ஒருவன் தனது 12 வயது சகோ­த­ரனை தவ­று­த­லாக சுட்டுக் கொன்ற விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க ஒஹியோ மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தென் கரோ­லி­னாவைச் சேர்ந்த மேற்­படி இரு சிறு­வர்­களும் ஒஹியோ மாநி­லத்­தி­லுள்ள தமது நண்பன் ஒருவன் வீட்­டிற்கு விஜயம் செய்­தி­ருந்த போது இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்த சிறு­வர்­களும் அவர்­க­ளது நண்­ப னும் துப்­பாக்­கியால் இலக்கு வைத்து சுடும் பயிற்­சியில் ஈடு­பட்ட போதே இந்தச் சம்­ப வம் இடம்­பெற்­றுள்­ளது. இதன் போது 12 வயது சிறு­வனின் தலை யில் துப்­பாக்கி ரவை பாய்ந்து அவன் உயி­ரி­ழந்­துள்ளான்.

இந்­நி­லையில் பொலிஸார் இந்தச் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். குறிப்­பாக சிறு­வர்­க­ளது கைக்கு நிஜ துப்­பாக்கி கிடைக்கும் வகையில் அதனை எவ­ரா­வது அலட்­சி­ய­மாக வைத்திருந்தார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.