11 வயது சிறுவன் ஒருவன் தனது 12 வயது சகோதரனை தவறுதலாக சுட்டுக் கொன்ற விபரீத சம்பவம் அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தென் கரோலினாவைச் சேர்ந்த மேற்படி இரு சிறுவர்களும் ஒஹியோ மாநிலத்திலுள்ள தமது நண்பன் ஒருவன் வீட்டிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த சிறுவர்களும் அவர்களது நண்ப னும் துப்பாக்கியால் இலக்கு வைத்து சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போதே இந்தச் சம்ப வம் இடம்பெற்றுள்ளது. இதன் போது 12 வயது சிறுவனின் தலை யில் துப்பாக்கி ரவை பாய்ந்து அவன் உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக சிறுவர்களது கைக்கு நிஜ துப்பாக்கி கிடைக்கும் வகையில் அதனை எவராவது அலட்சியமாக வைத்திருந்தார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.